கன்னியாகுமரி, நவம்பர் 22 –
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் அடிப்படை வசதிகள் குறித்தும் மருத்துவமனையை முழுவதும் சுற்றி பார்த்து ஆய்வு மேற்கொண்டார். தற்போது அங்கு புதியதாக கட்டப்பட்டு வரும் நோயாளிகளை வார்டு பணியையும் ஆய்வு மேற்கொண்டார். இரண்டு நாள் கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று காலை 7 மணி அளவில் இந்த திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேற்று குளச்சலில் நடைபெற்ற உலக மீனவர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்,பின்னர் இன்று இரண்டாவது நாளாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ளவர்,இன்று காலையில் வழக்கு போல (வாக்கிங்) நடைபயிற்சி மேற்கொண்ட சூழலில் திடீரென காலை 7:30 மணியளவில் பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் அனைவருமே காத்திருந்து வரவேற்றவர், பின்னர் நோயாளிகள் வார்டுக்கு சென்று நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் மருத்துவமனையில் குடிநீர் வசதி அடிப்படை வசதிகள் உள்ளனவா எனவும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் நோயாளி அறையையும் ஆய்வு மேற்கொண்டார். சுமார் அரை மணி நேரம் இந்த ஆய்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இன்று கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். பின்னர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.



