விளாத்திகுளம் ஆகஸ்ட்14.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரம், கந்தசாமிபுரம், கூத்தலூரணி, வள்ளிநாயகபுரம், பட்டியூர்,சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், முள்ளூர், சந்திரகிரி குறுக்குச்சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட இந்த சாலை தற்போது மிகவும் மோசமாக இருசக்கரவாகனம்,ஆட்டோ,108 வாகனம்,பள்ளி கல்லூரி வாகனங்கள், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக ஒரு அவசர மருத்துவதேவை, பிரசவத்திற்கு கூட உரிய நேரத்தில் செல்ல முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர், ஒரு அவசரகால மருத்துவத்தேவைக்கு 108 வாகனம்,ஆட்டோவை கூப்பிட்டால் கூட இந்த மோசமான சாலையில் வர வாகனங்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்தசாலையை சரி செய்யக்கோரி கடந்த ஐந்தாண்டுகளாக கமலாபுரம், கந்தசாமிபுரம், கூத்தலூராணி உள்ளிட்ட கிராம மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இதுவரை மனு அளித்து எந்த பிரயோஜனமும் இல்லை என்றும், இங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களின் பிரச்சனை அதே நிலை தான் நீடித்து வருகிறது என்றும், விரைவில் சாலையை சரி செய்யாவிட்டால் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக முறையான சாலை வசதி இல்லாமல் தவிக்கும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள்.



