தென்காசி, ஏப். 27 –
இராயகிரி உறவுகள் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் சிந்தாமணி தெலுங்கு யாதவ சமுதாய நலக்கூடத்தில் வைத்து உறவுகள் உதவும் கரங்கள் அறக்கட்டளை பெத்துராஜ் குட்டியான் தலைமையில் நலிந்த உறவுகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் இயலாதவர்களுக்கு உதவும் அறப்பணி ஆ. தட்சிணாமூர்த்தி பேருதவியுடன் உறவுகள் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் மங்கையர்களுக்கு சேலை, பெட்ஷீட் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள் போன்ற உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிந்தாமணி தெலுங்கு யாதவர் சமுதாயத்தின் நாட்டாமை கிருஷ்ணமூர்த்தி, அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் ராஜகோபால், தங்க மாரியப்பன், சங்கர கோமதி, உஷா, முள்ளிக்குளம் உமா மகேஸ்வரி, வெள்ளத்துரை, கணேசன், உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.



