ஈரோடு, ஜூன் 19 –
ராகுல் காந்தி பிறந்தநாள் விழா ஈரோட்டில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் மண்டலத் தலைவர் விஜயபாஸ்கர் தலைமையில் விஷேச பூஜை நடத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இதன் பிறகு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா தலைமையில் சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் சிவனடியார் ஓதுவார் ஜனார்த்தனன், பாஸ்டர் டேவிட் பள்ளிவாசல் இமாம் அனஸ் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். பின்னர் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு பென்சில், பேனா, நோட்டு புத்தகங்கள் மற்றும் நலிவடைந்த மகளிருக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம். பழனிசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் திருச்செல்வம் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், முன்னாள் கவுன்சிலர் சூரம்பட்டி சாம்ராட் அசோக், ஊடகப் பிரிவு தலைவர் முகமது அர்சத், சிறுபான்மை துறை துணைத் தலைவர் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.



