ஈரோடு, ஜூன் 25 –
தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க துணைப் பொது செயலாளர் குமரவேல் வரவேற்றார்.
தீர்மானங்களை மாநில செய்தித் தொடர்பாளர் வெங்கிடுசாமி வாசித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மாநில தமிழ்நாடு நகராட்சி ஓட்டுநர் சங்கம் மோகன், மாநில ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, வரி வசூலிப்பவர் சங்கம் பிரபாகரன் பஞ்சவர்ணம், மாநில ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன் செந்தில்குமார், அல்லா பிச்சை, தாமோதரன், மாநில செய்தி தொடர்பாளர், சிஐடியு மாவட்டச் செயலாளர் சுப்பு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாநில ஒருங்கிணைப்பாளர் பிரேம் குமார் நன்றி கூறினார்.