ஈரோடு, ஏப். 29 –
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பாம்புகள் வெப்பம் தாங்காமலும் இரையை தேடியும் பொந்துகளில் இருந்து அடிக்கடி வெளியே வந்து விடுகிறது. இதை பார்க்கும் பொது மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடிக்கிறார்கள். சில நேரங்களில் இந்த பாம்புகள் வீடுகளுக்கும் புகுந்து விடுகிறது. பாம்பு பிடி வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டு விடுகிறார்கள்.
இதே போல 6 நீள நாகப்பாம்பு ஈரோடு பவளத்தாம் பாளையம் மாணிக்கம் பாளையம் ஈபி காலனி பகுதியில் சுற்றி திரிந்தது. அப்போது அந்த பாம்பு அங்கு உள்ள 10 அடி ஆழ குழிக்குள் தவறி விழுந்து வெளியில் வர முடியாமல் நீண்ட நேரமாக தத்தளித்து. இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து பாம்பு பாம்பு என்று அலறினார்கள்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பாம்பு பிடி வீரர் யுவராஜ் சம்பவ இடத்திற்கு சென்று படம் எடுத்து ஆடிய அந்த நாகப் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார். இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.



