ஈரோடு, செப். 13 –
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈரோடு சார்பில் முதல் அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி ஈரோடு வில்லர சம்மட்டி நால்ரோடு எஸ்.கே ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்றது.
பள்ளி மாணவ மாணவியர், பொது பிரிவு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பொது பிரிவை சேர்ந்த ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு தங்களது திறமையான விளையாட்டுகளால் கைப்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.
இந்த போட்டிகளை கே.ஈ. பிரகாஷ், எம்.சி.வி.சி. சந்திரகுமார் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர். பொருளாளர் பி.கே. பழனிசாமி, செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், பகுதி செயலாளர்கள் அக்னி, சந்துரு ஆகியோர் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் வில்லரசம்பட்டி முருகேசன் மற்றும் ஈரோடு மாவட்டம் கையுந்து கழக துணை செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி என்ற செந்தில், ஆனந்த குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



