திருச்சி, ஜூன் 13 –
இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சியைச் சேர்ந்த ஹேம்சுதேசன் தேர்வாகியுள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவருக்கு பொதுமக்களும் கிரிக்கெட் சார்ந்த முன்னோடிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஹேம்சுதேசனின் இந்தத் தேர்வு உள்ளூர் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



