திருவட்டாறு, ஜூன் 19 –
ஆற்றூர் மரியா நர்சிங், பிசியோதெரபி மற்றும் அலைட் ஹெல்த் சயன்சஸ் கல்லூரிளின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி தலைவர் டாக்டர் ஜி. ரசல்ராஜ் துணை தலைவர் ஷைனி தெரசா ஆகியோர் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினர். ஒருங்கிணைப்பாளர் குமாரி தீபா வரவேற்றார். மரியா கல்விக்குழும இயக்குநர் டாக்டர் ஒய். சுஜர் முன்னிலை வகித்தார்.
மரியா நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர் அகிலா, பிசியோதெரபி கல்லூரி முதல்வர் டாக்ட்ர் வின்ஸ்டன் ஜெய ராஜ், அலைட் ஹெல்த் சயன்சஸ் கல்லூரி இயக்குநர் டாக்டர் ரோக்ரிக்ஸ் ஆகியோர் ஆண்டறிக்கை சமர்பித்தனர். தமிழ்நாடு செவிலியர் மற்றும் மற்றும் தாதியர் கவுன்சில் பதிவாளர் டாக்ட்ர் ஆர். ஷங்கர் ஷண்முகம் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
அவர் பேசியதாவது: “மாணவர்களுக்கு பட்டம் பெறும் நாள் ஓரு பொன்னாள் ஆகும். பெற்றோரை, ஆசிரியரை மதிக்க வேண்டும். படிப்பதை எப்பவுமே நிறுத்தக்கூடாது. நாம் பட்டம் பெற்று விட்டதுடன் எல்லாம் கற்றுகொண்டோம் என நினைக்கக்கூடாது. தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். கற்க கற்க புதிய விஷயங்கள் நம் மனதில் பதியும். அவை நமது வாழ்க்கையில் புதிய கதவுகளைத் திறக்கும்”. ஏற்பாடுகளை மரியா மருத்துவ மற்றும் பொறியியல் கல்விக்குழும பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.



