மார்த்தாண்டம், ஜூன் 22 –
ஆறுகாணி அருகே சிதறால் பகுதியில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அருமனை அருகே குஞ்சாலுவிளை பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவ தினம் அந்த மாணவர் பள்ளி அருகே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 7 பேர் கொண்ட கும்பல் திடீரென பிளஸ் 1 மாணவரின் சட்டையை பிடித்து இழுத்து தகாத வார்த்தைகளை பேசி தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த பிளஸ் 1 மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காயமடைந்த பிளஸ் 1 மாணவரின் தாய் ஆறுகாணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், பள்ளியில் வைத்து மாணவரை தாக்கியது உறுதியாக தெரிய வந்தது. போலீசார் அப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 7 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.


