நாகர்கோவில், ஜூன் 25-
ஆரல்வாய்மொழி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரீனா (45) இவர் நேற்று இரவு கோவையிலிருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆரல்வாய்மொழி வந்து கொண்டிருந்தார். முன்பதிவு பெட்டியல் இவர் பயணித்தார். அதிகாலையில் ரயில் ஆரல்வாய்மொழி அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது ரீனா தனது பேக் மற்றும் உடைமைகளை எடுத்துக் கொண்டு ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் இறங்க தயாராகிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அந்த பெட்டியில் நடமாடிய வாலிபர் ஒருவர் திடீரென ரீனாவின் ஹேண்ட் பேக்கிலிருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடினார். உடனடியாக ரீனா கூச்சல் இட்டார். அந்த வாலிபர் ரயில் பெட்டியில் இருந்து கீழே குதிக்க முயன்றார். ஆனால் பயணிகள் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் ரயில் ஆரல்வாய்மொழி வந்ததும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நாகர்கோவிலில் இருந்து ரயில்வே போலீசார் சென்று சம்பந்தப்பட்ட வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் குழித்துறை அருகே உள்ள கழுவன்திட்டை பகுதியைச் சேர்ந்த பிரஜித் (35) என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின் அவரை போலீசார் கைது செய்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆதர படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான பிரதீப் மீது வேறு வழக்குகள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


