தேனி, ஏப். 24 –
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு, தேனி மாவட்டம் 198. ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான தேனி கம்மவார் சங்கம் கல்லூரியில் இன்று (24.04.2026) வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, மூடி முத்திரையிடும் பணிகள் நடைபெற்றன. மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுப்பார்வையாளர்கள் பீம் சிங் மற்றும் வினய் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



