நாகர்கோவில், நவ. 3 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியில் மாவட்டத்தின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு அண்டை மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவ கல்லூரியும் இயங்கி வருவதால் மருத்துவ பயிற்சி பெறும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேராசிரியர்களுக்கும் தங்க விடுதி இங்கு உள்ளது.
மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆக்சி தர்ஷினி (41) என்பவர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள பேராசிரியர் குடியிருப்பின் மூன்றாம் நம்பர் வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 30ஆம் தேதி பேராசிரியர் ஆக்சி தர்ஷினி தனது சொந்த ஊரான கோவை மாவட்டத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த நகைகளை பார்த்த 50 பவுன் நகை திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகமானது ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மேலும் அங்கு சில பகுதிகள் புதர்களாவும் காட்சி அளிக்கிறது. மருத்துவமனைக்கு வெளிநபர்கள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் புற காவல் நிலையம் செக்யூரிட்டி என இருந்தும் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.



