திருவள்ளூர், ஆகஸ்ட் 30 –
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர் ஆவடி சா.மு. நாசர் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட புதிதாக அமைக்கப்பட்ட அயப்பாகம் காவல் நிலையம் துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்று காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.
உடன் காவல் ஆணையர் சங்கர் ஐ.பி.எஸ், மாவட்ட ஆட்சியர் பிரதாப், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க. கணபதி, மேயர் உதயக்குமார், கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, ஒன்றிய செயலாளர் மு. தலைவர் துரை வீரமணி, இளைஞர் அணி அமைப்பாளர் ஒன்றிய கவுன்சிலர் வினோத் மற்றும் அயம்பாக்கம் வியாபாரி சங்கத்தினர் மற்றும் டி.என்.இ.பி சுற்று வட்டார வியாபார சங்கம் நிறுவனர் வெள்ளையன், டைமன் ராஜா, தலைவர் மகாராஜா ஆகியோர் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



