திருப்பூர், ஜூன் 26 –
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைப்பு ரீதியாக பல்வேறு மாவட்டங்களை பிரித்து புதியதாக மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்டத்திற்கும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் வார்டு உறுப்பினர் வேல் குமார் சுவாமிநாதன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக காங்கேயம், தாராபுரம், மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளுக்கு மூலனூர் வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த செல்வகுமார், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக பல்லடம், உடுமலை ஆகிய தொகுதிகளுக்கு அமைப்புச் செயலாளர் சிவசாமி எம்பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



