ராமநாதபுரம், ஜுலை 8 –
ராமநாதபுரம் அதிமுக மாவட்ட கழக செயலாளர் முனியசாமி மற்றும் கழக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா ஆகியோர் தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியன் முன்னிலையில் மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் விஜய ஹரி கிருஷ்ணன் ஏற்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிற கட்சிகளில் இருந்து விலகி தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இதில் கழக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் மாவட்ட அவை தலைவர் சாமிநாதன், கழக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர்.ஜி. ரத்தினம், கழக மாணவர் அணி துணைச் செயலாளர் செந்தில்குமார், விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கருணாகரன் ஆகியோர் மற்றும் மண்டபம் மேற்கு ஒன்றியத்தைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் மற்றும் கிளை கழகச் செயலாளர் கலந்து கொண்டனர்.



