சந்தன கட்டையுடன் வாலிபர் கைது – பூதப்பாண்டி – ஜனவரி -23 -பூதப்பாண்டியை அடுத்துள்ள ஞானதா சபுரம் சானல்கரையோரமாக நேற்று முன்தினம்மாலை சுமார் 5 மணி அளவில் வேளிமலை வனச்சரகம், வேளிமலை தெற்கு பீட்டில் வனத்துறையினர்ரோந்து பணி மேற்கொண்ட போது, ஞானதாசபுரம் சானல் கரையோரம் ஒருவர் பையை சுமந்து கொண்டு வந்தார்ரோந்து பணியில் இருந்த பணியாளர்கள் அவரை பிடித்து நிறுத்தி, பையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது பையில் விறகு எடுத்துச் செல்வதாக கூறினார் பையை திறந்து பார்த்தபோதுபையில் சந்தனக் கட்டைகள் இருப்பது தெரியவந்ததுஉடனடியாக அவரைபிடித்து விசாரணை செய்துஎங்கிருந்து இதனை எடுத்து வந்தார் என விசாரணை செய்ததில் எவ்வித அனுமதியும் இல்லாமல் திருட்டுத்தனமாக எடுத்து வந்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சந்தன கட்டை களுடன் வனச்சரக அலுவலகம் கொண்டு வந்து தொடர்விசாரனை நடத்தி வருகிறார்கள் கடத்தப்பட்ட
சந்தனக்கட்டை சுமார் 10 கிலோ எடையுடன் மூன்றுலட்ச ரூபாய் மதிப்புடையது என்றும் கடத்திய நபர் துவரங்காடு பகுதியைச் சேர்ந்த அருண் (39) கைது செய்யப்பட்டுள்ளனர்