ராமநாதபுரம், ஜன.16-.
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் பாசிப்பட்டிணம் கிளையில் சாகுல் ஹமீது தலைமையில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை சமுதாய பேரியக்கம் தமுமுகவில் இணைத்துக்
கொண்டனர்.
இந்நிகழ்வில் தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக்_பாட்ஷா மற்றும் மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிஃப்ரி தமுமுக மாவட்ட செயலாளர் பொறியளர் ஜாவித் அஸ்ஸாம், மாவட்ட துணை செயலாளர்கள் நிஷார், பனைக்குளம் ஹசன், உபைதுல்லா, தேவிபட்டிணம் ஜகுபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா தமுமுக கடந்து வந்த பாதைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
முன்னாள் தமுமுக பாசிப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் கலந்தர், நன்னப்பா, ராவுத்தர்,ஜெய்னுதீன், அஜீஸ் ஆகியோர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.