சிவகங்கை ஆட்சியர் தகவல்.
சிவகங்கை:ஏப்:16 தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி 2024-25ம் ஆண்டிற்கு ஊரக மற்றும் நகர்புறங்களில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHG), ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (PLF), வட்டார அளவிலான கூட்டமைப்பு (BLF), கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் (VPRC) பகுதி அளவிலான கூட்டமைப்பு (ALF) மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு (CLF) ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் அமைப்புகளுக்கு தமிழக அரசால் மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, சிவகங்கை மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கு மணிமேகலை விருதுக்கு தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மேலும், மேற்காணும் விருதிற்கு தகுதியான ஊரக சமுதாய அமைப்புகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகிலும் மற்றும் நகர்புற சமுதாய அமைப்புகள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வருகின்ற 25.04.2025-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்திடல் வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சிவகங்கை என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.