நாகர்கோவில் ஜூன் 21
கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் பத்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு “சுயத்திற்கும் சமூகத்திற்கும்” என்ற கருப்பொருளை மையமாக வைத்து இந்திய அஞ்சல் துறை சார்பாக யோகா பயிற்சியில் ஈடுபட இருப்பதாக செய்தி குறிப்பு வெளியிட்டு அவர் தெரிவித்ததாவது:-
பத்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 21) கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் மற்றும் சிதறால் சமணர் மலைக்கோவிலில் வைத்து காலை 7மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது.
மேலும் இந்நிகழ்வில் அஞ்சல் துறையை சார்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு சுயத்திற்கும் சமூகத்திற்கும் என்ற கருப்பொருளின்கீழ் யோகா பயிற்ச்சியில் ஈடுபட உள்ளதாக தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.