நாகர்கோவில் – நவ – 24,
குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை “நமது கழிப்பறை நமது கெளரவம்” என்ற நாடு தழுவிய இயக்கத்தை உலகக் கழிப்பறை தினமான நேற்று (நவம்பர் 19) தொடங்கியுள்ளது.இது மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10, 2024 அன்று முடிவடையும். அதனை தொடர்ந்து
கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மேலசங்கரன் குழி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மேலசங்கரன் குழி முதல்நிலை ஊராட்சி ஒன்றியம் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி – 2, உலக கழிப்பறை தினம் 2024 முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாக ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் தலைமையில் விழிப்புணர்வு பேரணி மேலசங்கரன் குழி ஊராட்சிக்கு உட்பட்ட தாழையான் கோணம் பகுதியில் பேரணி துவங்கி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடம் ” வீட்டில் உள்ள கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், நமது ஊராட்சியில் கழிப்பறை வசதி இல்லாத வீடுகளே இல்லை என்பதை கூறி கொள்வது நம் அனைவருக்கும் பெறுமை , பொது இடங்களில் மலம், சிறுநீர் கழிக்க கூடாது. நமது ஊராட்சியை 100% சுகாதாரமான ஊராட்சியாக மத்திய அரசு விருது வழங்கி கௌரவிக்கவும், மக்கள் அனைவரும் நோய் , நொடிகள் இன்றி சுகாதாரமாக வாழ அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அதிகாரி, மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.