காரைக்குடி ஏப்ரல் 08
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டத்தில் செட்டிநாடு வேளாண் கல்லூரி மாணவிகளான இன்பன்ட் அமல சந்தியா, ஜமுனா, ஜீவிதா, கார்த்திகா, கீர்த்தனா, கீர்த்திகா, லக்ஷ்யா, மகாலட்சுமி, மரிய ஆர்த்தி, நந்தினிதேவி ஆகியோர் கிராமப்புற வேளாண்மை அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து வேளாண் கல்லூரி மாணவிகள் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக
சுகாதார தினத்தை முன்னிட்டு
சுற்றுப்புற சுகாதாரத்தைக் காத்தல், உடல்நலம் பேணுதல், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல் மற்றும்
உலக சுகாதார தினத்திற்கான கருப்பொருள் “ஆரோக்கியமான தொடக்கங்கள், நம்பிக்கைக்குரிய எதிர்காலங்கள்” தாய்வழி மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டது.
என
இந்த ஆண்டிற்கான கருப்பொருள் பற்றி பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு. கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியின் போது ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், சுத்தம் காப்போம் சுகாதாரம் பெறுவோம்’ போன்ற கோஷங்கள் முழங்கப்பட்டன. இதன் மூலம் பள்ளி மாணவர்களும் ஊர் மக்களும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டனர்.
உலக சுகாதார தின விழிப்புணர்வு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics