ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன் பாளையத்தில் தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கத்தின் மூலம் உண்ணிச்செடியில் இருந்து எரிகட்டிகள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
இந்தியாவில் காடுகளில் பரவியுள்ள ஒரு ஆக்கிரமிப்பு இனமான உண்ணிச்செடி வன சூழலுக்கும், சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கடம்பூர், ஆசனூர் மற்றும் தலமலை ஆகிய இடங்களைச் சேர்ந்த பழங்குடி சமூகங்கள் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளனர். உண்ணிச் செடிகளிலிருந்து ப்ரிக்வெட்டுகளை உற்பத்தி செய்தல் ஆகும். ப்ரிக்வெட்டுகள் என்பது எரியக்கூடிய எரிபொருளின் சுருக்கப்பட்ட வடிவமாகும், இதை விறகு மற்றும் நிலக்கரிக்குப் பதிலாக தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படலாம்.
இருளர், உரலி மற்றும் ஷோலகர் பழங்குடியினரைச் சேர்ந்த உறுப்பினர்கள், ப்ரிக்வெட்டுகளை தயாரித்து விற்பனை செய்வதற்காக தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கம் என்ற நிறுவனத்தை பதிவு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தில் இயக்குநர்கள் பாலன் சிறுவடிவேல் தலைமையிலான 30 பேர் கொண்ட குழு உள்ளது. உண்ணிச் செடியிலிருந்து ப்ரிக்வெட்டுகளை தயாரிப்பதன் சாத்தியக்கூறுகளை தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கம் வெற்றிகரமாக நிரூபித்துள்ளது. மேலும், இத்திட்டதை செயல்படுத்த தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் தமிழ்நாடு பட்டியல் இன மற்றும் பழங்குடி நிதியின் கீழ் ரூ.2 கோடி நிதி ஒப்பளிக்கப்பட்டு, இதுவரை ரூ.1.50 கோடி நிதி வழங்கியுள்ளது.
இந்நிதியின் மூலம் தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கம் மூலம் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது, மேலும் முடிக்கப்பட்ட பொருட்கள் தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகின்றன. உண்ணிச்செடிகளை சேகரிப்பதற்கு, இத்தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார நன்மைகள் மட்டுமல்லாமல் உண்ணிச்செடிகள் ப்ரிக்வெட் உற்பத்தி பல சுற்றுச்சூழல் நன்மைகளையும் கொண்டுள்ளது. இது வனப்பகுதிகளில் மண் வளத்தை அதிகரிப்பதோடு, வன பாதுகாப்பை ஊக்குவிக்கிறது.
அதனைத் தொடர்ந்து இன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தாளவாடி ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கத்தின் மூலம் உண்ணிச்செடியில்
[இருந்து கரிக்கட்டிகள் தயாரித்து விற்பனை விற்பனை செய்யும் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.



