தஞ்சாவூர் ஜூன் 7
தஞ்சாவூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டிதஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை ஆர் ஆர் நகர் அருகே மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணியைமாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர், தொடர்ந்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அருகே உள்ள சிந்தாமணி குடியிருப்பு வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் உலக சுற்றுச் சூழல் தினத்தை யொட்டி மரக்கன் றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ,தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கவின் மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல்,அறிவியல் இயக்கம் பேராசிரியர் சுகுமார், பொருளாளர் செல்வராணி, பதிவாளர் (பொறுப்பு) தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்