அஞ்சுகிராமம் மார்ச் – 10
அஞ்சுகிராமம் அருகே இலட்சுமிபுரத்தில் வள்ளுவர் மகளிர் இயக்கம். மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய 3-வது சர்வதேச மகளிர் தின விழா பாரதமாதா நூலக திடலில் நடந்தது. காலையில் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நண்பகல் மாபெரும் சமுத்துவ விருந்து நடந்தது இவ்விழாவில் அஞ்சுகிராமம். பேரூராட்சி துய்மை பணியாளர்களை கெளரவித்து, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற மகளிர் விழாவிற்கு வள்ளுவர் மகளிர் இயக்க கௌரவ தலைவர் வசந்தாள் ஆதித்தன். பொருளாளர் இந்திரா பிரகலாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் அழகம்மாள் முத்து தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அகில இந்திய கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலசங்க மாவட்ட செயலாளர் சமூகசேவகி ஜெயா ஶ்ரீதரன், லீபுரம் அரசு தொடக்க பள்ளி ஆசிரியர் தங்கம் கணேசன், அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் கலந்துகொண்டனர். துணை தலைவர் காந்திராஜ் பேசும் பொழுது தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் மகளிருக்கான மக்கள் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மகளிர் மேம்பாட்டுக்காக கல்வி, சுகாதாரம், சமூக மாற்றம், பெண்கள் முன்னேற்றம், நிர்வாகம் போன்ற விஷயங்களில் அப்பா
ஸ்தானத்தில் இருந்து பல திட்டங்களை தீட்டி வருகிறார். கலைஞர் முதல்வராக இருக்கும்போது பெண்களுக்கு சொத்தில் சம உரிமை எனும் சட்டத்தை நடைமுறை படுத்தினார். மகளிருக்காக அரசு வேலைகளில் 30% இட ஒதுக்கீடை கொண்டுவந்தார். அது போல் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கினார். அரசு பஸ்களில் மகளிர் விடியல் பயணம் என மகளிருக்காக பல திட்டங்களை தீட்டி வருகிறார். மேலும் மாணவிகள், வாலிப பெண்கள் பாலியல் சம்மந்தமான தொந்தரவு களுக்கு எதிராக விழிப்புணர்வடைய வேண்டும்.தி.மு.க திராவிட மாடல் அரசு என்றும் உங்களுக்கு துணை நிற்கும் என்றார். நிகழ்ச்சி முடிவில் வள்ளுவர மகளிர் இயக்க செயலாளர் கீதா காந்திராஜ் நன்றி கூறினார்.வள்ளுவர் மாணவர் இயக்க நிர்வாகிகள் உ.ஆதித்தன், பிரகலாதன் கலந்து கொண்டனர்.