நித்திரவிளை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையான போலீசார் நேற்று இரவு 7 மணியளவில் மீனவ கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூத்துறை மீனவ கிராமத்தில் ஒரு வீட்டின் முன்னால் ஆட்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர் வீட்டின் உள்ளே சென்று சோதனை செய்தார். அப்போது கட்டிலின் அடியில் குட்கா புகையிலை பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
போலீசார் பதிக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா புகையிலை கைப்பற்றி புகையிலை விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் அளித்த புகாரின் பேரில் 40 பாக்கெட் குட்கா புகையிலை பறிமுதல் செய்து, டில்லி மேரி ( 60) என்ற பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.
குளச்சல் : மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் (39). கூலி தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரின்ஸ் மீது பல்வேறு வழக்குகள் இருந்து ரவுடி பட்டியலில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவருடைய மனைவி பிள்ளைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இதனால் பிரின்ஸ் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரின்ஸ் இன்று காலை மதுவில் விஷத்தை கலந்து குடித்து அப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவர் மயங்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்து குளச்சல் போலீசார் பிரின்சின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



