தேனி மாவட்டம், மே – 17
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட புலி குத்தி முதல் அம்மாபட்டி செல்லும் சாலை முன்பே பள்ளம் மேடுமாக காட்சியளித்தது தற்போது பெய்து வரும் மழையால் பாதை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது புலி குத்தி விவசாயிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இப் பாதையை அதிக அளவில் பயன்படுத்துக்கின்றன அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது அன்றாட தேவைக்கு கூட வெளியே செல்லமுடியாத சூழ்நிலையில் உள்ளன மேலும் வாகன விபத்து ஏற்படும் அபாய நிலையும் உள்ளது மழைநீர் சாலையில் தங்குவதால் கொசுக்களின் தொல்லை அதிகமாக காணப்படுவதால் நோய்தொற்று ஏற்படும் நிலையில் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றன மக்களின் நலன் கருதி புலி குத்தி ஊராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்