தென்காசி. மார்ச் 27
தென்காசி மாவட்ட 2வது வார்டு மாவட்ட கவுன்சிலர் மதி மாரிமுத்து மற்றும் க.கனிமொழி திமுக மாவட்ட துணை செயலாளராவும் 6வது வார்டு மாவட்ட கவுன்சிலராக உள்ளார் அதாவது 28-03-2025 அன்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட கவுன்சிலர்களுக்கு அஜண்டா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலை மேற்படி அஜண்டாவில் மொத்த தொகை ரூ.2,99,08,393/-தொகையில் வரையறுக்கப்படாத நிதி ரூ.1,07,94,218 மற்றும் வரையறுக்கப்பட்ட நிதி குடிநீர் பணிகளுக்கு 80,95,663 மற்றும் வரையறுக்கப்பட்ட நிதி சுகாதார பணிகளுக்கு 80,95, 663 மொத்த தொகை 2,69,85,544 மேற்படி நிதியில் வரையறுக்கப்படாத நிதியில் இருந்து மட்டும் தங்களுக்கு நிதி எவ்வளவு உள்ளது என்று கூறாமல் 10 லட்சம் ரூபாய்கான நிதி வந்துள்ளதாகவும் ஒவ்வொரு வார்டுக்கும் வேலை எடுக்கும்படி 10 லட்சத்திற்கு மட்டும் என கூறுகின்றனர் ஆனால் அஜண்டாவில் குறிப்பிட்டுள்ள வரையறுக்கப்பட்ட நிதி குடிநீர் பணிகளுக்குகான நிதியை குறித்தோ சுகாதார பணிகளுக்காக நிதி குறித்தோ எந்தவிதமான வேலையையும் கவுன்சிலர்களுக்கு எடுக்கச் சொல்லவில்லை அப்படி குடிநீர் பணிகள் மற்றும் சுகாதார பணிகளுக்காக நிதி வந்துள்ளது என்பது குறித்து தங்களுக்கு தெரியாது எனவும் அஜெண்டா வந்த பிறகு தான் தெரியும் ஆனால் தங்கள் வார்டுகளிலும் குடிநீர் பிரச்சனை சுகாதார பிரச்சனை தலை தூக்கியுள்ளன நிலையில்தங்களிடம் எதுவும் கலந்து ஆலோசிக்காமல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுகவுன்சிலர் ஆகிய நாங்கள் மாவட்ட பஞ்சாயத்து செயலரிடம் கேட்டபோது மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவு பேரில் தான் நிதி ஒதுக்கப்படுகிறது என கூறுகின்றதாகவும் கடந்த 30-11-2023ம் தேதியில் ஊரக உள்ளாட்சு மக்கள் முறை மன்றம் நடுவம் தீர்ப்பின் அடிப்படையில் தங்களுக்கு சரிசமமாக நிதியை பிரித்து தர வேண்டும். வரையறுக்கப்பட்ட நிதி குடிநீர் பணிக்கு என ஒதுக்கப்பட்ட நிதி ரூ.80,95,663/-சுகாதார பணிகளுக்கு என ஒதுக்கப்பட்ட நிதி ரூ.80,95,663/-மேற்படி இரண்டு நிதிகளிலும் அனைத்து கவுன்சிலருக்கும் சரிசமமாக அனைத்து வார்டு களிலும் வேலை செய்வதற்கு தகுந்தாற்போன்று நிதி ஒதுக்கடு செய்து தரவேண்டும் இந்த அஜண்டாவில் பாரபட்சமாக நிதி ஒதுக்கி முறைகேடு செய்துள்ளதால் தங்கள் வார்டுகளில் மேம்பாட்டு புறக்கணிக்க படுகிறதாகவும்
ஆகையால் இந்த அஜண்டாவை ரத்து செய்து அனைத்து வார்டுகளுக்கும் வரையறுக்கப்பட்டத நிதியை சரிசமமாக ஒதுக்கீடு செய்து கூட்டத்தை நடத்த உத்தரவிடம் படி மாவட்ட 6-வதுவார்டு மாவட்ட கவுன்சிலர் கனிமொழி மற்றும் இரண்டாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் மதி மாரிமுத்து ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் நடவடிக்கை எடுக்கப்படுமா ???



