கிருஷ்ணகிரி,டிச.9- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சியில் புளியம்பட்டி கிராமத்தில் இளைஞர்கள் கல்வி வளர்ச்சி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர். ரங்கநாதன், ஒன்றிய கவுன்சிலர் அம்மன் ராஜா, வலசகவுண்டனுர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயவேல் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை நிறுவனர் பூவரசன், தலைவர் உதயகுமார், துணைத்தலைவர் சதீஸ்வரன், இயக்குனர்கள் அறிவரசன், கிருத்திகா மற்றும் ஒசூர் பழனி, காஞ்சிபுரம் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.



