ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாயகி வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், நகர் மன்ற துணை தலைவர் பிரவின் தங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் ராமநாதபுரம் எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம், கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணங்களை வழங்கினர்.
நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்கள் சூசை, தமிழரசி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வெற்றிவேல், பாஸ்கரன், கருப்பையா, சுமையா பானு, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், பள்ளி கல்வி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் அஜய் குமார் நன்றி கூறினார்.
ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு வரவேற்பு



