திருப்பத்தூர்: ஆக-08, திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார் தாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பெயரில் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. புதிதாக 26 புகார் மனுக்களை வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக பெற்றுக்கொண்டார். மேலும் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய மற்றும் வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனம் திருந்திய நான்கு சாராய வியாபாரிகள் இனிவரும் காலங்களில் மது விற்பனையில் ஈடுபட மாட்டோம் எனவும் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுமாறு துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்தனர் அவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் உதவியை பெற்று தருவதாக உறுதியளித்தார்.
வாரந்தோறும் புதன்கிழமைகளில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் இக்கோட்டத்தில் மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்பதனை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.