மதுரை, ஆக. 3 –
We The Leaders அமைப்பு சார்பில் எண்பதாவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தென் தமிழகம் சார்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவாக மரக்கன்றுகள் அதுவும் விழா மற்றும் வைகை ஆற்றில் பாலித்தின் கழிவுகள் அகற்றும் நிகழ்வு அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் மதுரை வைகை ஆற்றில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிம்மக்கல் தரைப்பாலம் பகுதியில் தேங்கியுள்ள ஆகாய தாமரைகள் ஜேசிபி இயந்திரங்கள் வாயிலாக அகற்றப்பட்டு வருகின்றது. மேலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதி தரைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்டோர் வைகை ஆற்றுக்குள் இறங்கி பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை சேகரித்து அகற்றி வருகின்றனர்.
We The Leaders என்ற அமைப்பை துவங்கிய அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை முதலில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுகளை மேற்கொண்டார் அதனை தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது மேலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெறுகிறது.
வைகை ஆற்றில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அந்த அமைப்பின் தன்னார்வலர்கள் சீருடை அணிந்து கையுறைகளுடன் பாதுகாப்பாக கழிவுகளை அகற்றி வருகின்றனர். காவல்துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



