தஞ்சாவூர் ஜூன் 11
இடி மின்னலில் இருந்து தற்காத்து க் கொள்ளும் வழிமுறைகள் குறித் து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:
இடி சத்தம் கேட்டால் மின்னல் தாக்கும் அளவிற்கு அருகில் உள்ளீ ர்கள் என்பதே உணர வேண்டும். பயணங்களை தவிர்த்து முடிந்தால் வீட்டிலேயே இருக்க வேண்டும். கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூட வேண்டும், வீட்டின் வெளிப்புறம் உள்ள பொருள்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் .குழந்தைகள் மற்றும் வீட்டு விலங்குகள் உள்ளே இருப்பதை உறுதி செய்ய வேண் டும் தேவையில்லாத மின் சாதனங் கள் துண்டிக்க வேண்டும்.
ஓடும் நீரில் அல்லது மழையில் குளிப்பதை தவிர்க்க வேண்டும், உலோக கட்டமைப்புகள், உலோக தாளுடன் உரிய கட்டுமானங்கள் உள்ள இடங்களில் தங்குவதை தவிர்க்க வேண்டும்.
மரங்களுக்கு அடியில் ஒதுங்க வேண்டாம் ,எனெனில் இவை மின்சாரத்தை எளிதில் கடத்தும் இடி மின்னலின் போது சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் சென்றால், உடனே இறங்கி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். படகு சவாரி அல்லது நீச்சல் பயிற்சி செய்து கொண்டு இருந்தால் உடனே தரையில் பாதுகாப்பான இடத்திற் கு செல்ல வேண்டும்.
இடியின் போது வாகனத்தில் பயணம் செய்தால் வாகனத்திலே யே பாதுகாப்பாக இருக்க வேண் டும் வாகனத்தை மரத்தின் அடியி லோ மின்சார கம்பிக்கு அருகிலோ நிறுத்தக்கூடாது. மின்னல் தாக்கிய வரை மருத்துவமனைக்கு அழைத் துச் செல்ல வேண்டும். முடிந்தால் அவருக்கு தேவையான அடிப்படை முதலுதவி செய்ய வேண்டும்
மேற்கண்டவாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.