ராமநாதபுரம், பிப்.19-
இன்றைய காலகட்டத்தில் கர்ப்பிணிகள் எப்படி எந்த வழிமுறையை பின்பற்றுவது யாரிடம் ஆலோசனை கேட்பது என்று மிகவும் யோசனையில் சரியான ஆலோசனை கிடைக்காமல் சில பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். முன்பு எல்லாம் இதற்கு வீட்டில் உள்ள பெரியவர்கள் உரிய ஆலோசனை அனுபவரீதியாக கூறினர். இந்த வழிமுறை தற்போது ஆயுர்வேதத்தில் மிகவும் பரந்து உள்ளது. இந்த ஆயுர்வேதத்தை தேடித்தான் தற்போது பெரிய பெரிய மனிதர்கள் செல்ல துவங்கி விட்டனர். கர்ப்பிணி பெண்களுக்கு பனி கூட நீர் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் எப்படி இருந்தால் எளிய முறையில் பிரசவம் ஆகும் என்று புரியும் விதத்தில் பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
பொதுவாக
குழந்தையை மிதக்க செய்யும் பனிக்குட நீர் திரவமானது குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க செய்கிறது. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் கர்ப்ப பைக்கும், நமது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் இடையில் இருக்கும் நீர் படலம் தான் பனிக்குடம் நீர் ஆகும். இந்த பதிவில் பனிக்குடம் நீர் குறைவாக இருந்தால் என்ன ஆகும். இந்த பனிக்குட நீரை அதிகரிக்க நாம் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த முழுமையான விவரங்களை இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.
பனிக்குட நீர் எவ்வளவு அளவில் இருக்க வேண்டும்:
பொதுவாக பனிக்குடம் நீர் என்பது ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு 8 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை இருக்க வேண்டும். இது சராசரி அளவாகும். உங்களுக்கு பனிக்குட நீர் சரியான அளவில் இருந்திருந்தால் நீங்கள் எடுக்கும் ஸ்கேன்னில் Amniotic Fluid Level is Adequate என்று இருக்கும்.
இந்த அளவிற்கு மிகவும் குறைவாக இருந்தால் அது வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு மிகவும் பிரச்சனையை ஏற்படும். அது என்னென்ன பிரச்சனை என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்..
பாதிப்புகள்:
பனிக்குடத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சிசுவின் நெஞ்சில் கொடி கர்ப்ப பையுடன் நன்றாக ஒட்டிக்கொள்ளுமா. இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நஞ்சிக்கொடி வழியாக செல்லும் இரத்தம் ஓட்டமானது மிகவும் குறைவாக செல்லுமாம்.
இதனால் குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் போதுமான அளவு கிடைக்காமல் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் நுரையீரல் வளர்ச்சியில் குறைகள் ஏற்படலாம்.
பிரசவத்திற்கு முன்னும் பின்னும் குழந்தைக்கு மூச்சு திணறல் போன்ற சிக்கல் ஏற்படும்.
சில சமயங்களில் குழந்தை பிறக்கும் போது குழந்தையின் பாதங்கள் வளைந்த நிலையில் பிறக்கலாம்.
ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு பனிக்குடம் நீர் குறைந்துகொண்டே வந்தால் அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு அவசரமான சிகிச்சை தேவை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த சிகிச்சை முறை பொறுத்தவரை ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தில் எப்பொழுது குறைவு ஏற்படுகிறதோ அதனை பொறுத்து சிகிச்சை முறை என்பது வேறுபாடும்.
பனிக்குட நீர் ஏன் குறைகிறது?
பனிக்குடம் முன் கூட்டி உடைதல்:
பனிக்குடம் முன் கூட்டியே உடையக்கூடும். இதனால் பனிக்குட நீர் குறைகிறது.
தொப்புள் கொடி பிரச்சனை:
தொப்புள் கொடியானது, நம்முடைய பிள்ளைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், ஆக்சிஜனையும் வழங்குகிறது. ஒருவேளை கருப்பை சுவரிலிருந்து இது பிரிந்திருந்தால், அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. இதனாலும் பனிக்குடம் வலுவற்று இருக்கக்கூடும்.
பிறப்பதில் குறைபாடு:
நம்முடைய பிள்ளைகளின் சிறுநீரகம் போதுமான அளவு சிறுநீரை உற்பத்தி செய்ய தவறினால், இதனாலும் பனிக்குட நீர் குறையக்கூடும். இது மட்டுமில்லாமல், பின்வரும் காரணங்களினாலும் பனிக்குட நீர் குறைகிறது. அவை,
ப்ரீ-எக்ளாம்ப்சியா
சர்க்கரை நோய்
உயர் இரத்த அழுத்தம்
உடல் பருமன்
நீர் சத்து குறைபாடு
சில மருந்துகள்:
உயர் இரத்த அழுத்தத்துக்காக பரிந்துரைக்கப்படும் மருந்து/மாத்திரையால் பனிக்குட நீர் குறையலாம்.
பிரசவத்துக்கு முன்பு பனிக்குட நீர் குறையுமா?
36 வாரங்கள் கழித்து பனிக்குட நீர் குறைய தொடங்கும். இது 42 வாரங்கள் வரையிலும் குறைந்து தான் காணப்படும். இது, பிள்ளையை நாம் வரவேற்க தயாராக இருப்பதை குறிக்கும் ஒரு அறிகுறியாகும்.
பனிக்குட நீரை அதிகரிக்க என்ன வழிகள்?
தண்ணீர் அதிகம் பருகுதல்:
பனிக்குட நீர், இருக்க வேண்டிய அளவுக்கு சற்று குறைவாக இருக்கும்போது, தண்ணீர் அதிகம் குடித்தாலே நல்ல முன்னேற்றம் காணப்படும்.
2. மாத்திரை
டாக்டர்கள் பனிக்குட நீரை அதிகரிக்க செய்ய மாத்திரைகளையும் சில சமயம் பரிந்துரைப்பர். பனிக்குட நீர் அதிகரிக்கும் வரை இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள அவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
ஓய்வு:
குறைவான பனிக்குட நீரைக்கொண்ட பெண்கள், ஓய்வில் இருக்குமாறும் டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அமினோ இன்ஃபியூஷன்:
இந்த முறையில், கருப்பை வழியாக உப்புக் கரைசலை பனிக்குட பைக்குள் செலுத்தி பனிக்குட நீரை அதிகரிக்க செய்கின்றனர்.
முன் கூட்டிய பிரசவம்:
ஒருவேளை பனிக்குட நீர் தொடர்ந்து குறைந்து வருவதை டாக்டர்கள் கண்டால், முன் கூட்டிய பிரசவத்துக்கு பரிந்துரைக்கின்றனர். இதனால், தாய்க்கும், சேய்க்கும் மிகவும் நல்லது.
முன் கூட்டிய பிரசவத்தில் பிள்ளைகளுக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் உடனடியாக கிடைக்கப்பெறுவதால், ஆரோக்கியத்தில் எந்த வித குறைபாடுகளும் உண்டாவதில்லை.
ஆலிகோஹைட்ரோமினஸ்:
பனிக்குட நீர் குறைவாக இருப்பதை இப்படி அழைப்பார்கள்.
இந்த இந்த வழிமுறைகளை முறைப்படி கடைப்பிடித்தால் கர்ப்பிணிகள் நோயற்ற ஆபரேஷன் இல்லாத ஒரு மிகச்சிறந்த புத்திசாலியான குழந்தையை பெற்று எடுக்க முடியும். இது நம் முன்னோர்கள் வாழ்வில் நடந்துள்ளது. எனவே எதையும் முறையாக பின்பற்றுங்கள் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால்
ராமநாதபுரம் பட்டினம் காத்தான் இசிஆர் ரோட்டில் அமைந்துள்ள சுகம் ஆயுர்வேத வைத்திய சாலையில் உரிய முன்பதிவு செய்து டாக்டரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.