கிருஷ்ணகிரி :சேப் :25:கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக, 2024-ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டிற்கான வன்கொடுமை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையினரால் வன்கொடுமை தடுப்புச்சட்டம் 1989 மற்றும் திருத்தச்சட்டம் 2016 -இன் கீழ் 2024-ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டிற்கான வன்கொடுமை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்து வழக்குகளின் நிலை குறித்து அரசு சிறப்பு வழக்குரைஞர் (SC/ST) திரு.ரமேஷ் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. இப்பிரிவிலான அனைத்து வழக்குகளையும் விரைவாக நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, SC/ST பிரிவினைச் சார்ந்த அரசு ஊழியர்களின் குறை களைவு செய்வதற்கான பற்றாளர் கூட்டம் மற்றும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை தடுக்கும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டங்களில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் .தே.ரமேஷ்குமார், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர், அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி / நகராட்சி அலுவலர்கள்,
வட்டாட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.