நாகர்கோவில், ஜூலை – 15,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரிக்கு பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் இரவு 8 45 மணிக்கு இந்த ரயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றது ரயில் பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக பிளாட்பாரத்தில் அந்த வாலிபர் தவறி விழுந்தார் இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றினார்கள். கீழே விழுந்த வாலிபருக்கு லேசான காயம் ஏற்பட்டது அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது பின்னர் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த வாலிபர் நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்த மதன் என்பது தெரிய வந்தது திருவனந்தபுரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் முதலாவது பிளாட்பாரத்தில் ரயில் வந்து கொண்டிருந்தபோது ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்கி உள்ளார் அப்போது அவர் தவறி விழுந்தது தெரியவந்துள்ளது. போலீஸார் அவருக்கு அறிவுரை வழங்கினார்கள். ஓடும் ரயிலில் இருந்து வாலிபர் கீழே இறங்கும்போது தவறி விழுந்த வீடியோ நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து உள்ளன.