கிருஷ்ணகிரி ஜூன் 2 : வேம்பு திரைப்படம் உலகெங்கும் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழர்களின் வீர கலையான சிலம்பம் கலையை மையமாக வைத்து,பெண்ணியத்தை போற்றும் படமாக உள்ளது. பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும்,கிராம வாழ்வியலை அழகாக காட்டியுள்ள வேம்பு திரைப்படதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். வேம்பு திரைப்படத்தின் தயாரிப்பாளர் கோல்டன் சுரேஷ் தலைமையில் படத்தின் இரண்டாவது வார வெற்றிவிழாவை கொண்டாடி, படத்தில் பணியாற்றிய சிலம்பம் கலைஞர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.தயாரிப்பாளர் கோல்டன் சுரேஷ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பெண்கள் வளர்ச்சியை பற்றி பேசும் வேம்பு திரைப்படத்தை அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இலவசமாக திரையிட ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தார். வேம்பு திரைப்படம் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



