சிவகங்கை: மார்ச் :11
சிவகங்கை மாவட்டத்தில் வாடி, வட மாடு மஞ்சுவிரட்டு, வெளிவிரட்டு என்று மூன்று விதமான போட்டிகள் நடப்பது வழக்கம்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் சில பெண்கள் துணிச்சலோடு காளை மாடுகளை அவிழ்த்து போட்டியில் பங்கேற்றனர்.
இவர்களுக்கு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் விழாவானது தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் சிவகங்கை அண்ணாமலை நகரில் உள்ள ஒரு தனியார் மஹாலில் நடைபெற்றது . விழாவிற்கு சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமை தாங்கினார் . இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் அவர்கள் போட்டிகளில் பங்கு பெற்ற வீரப் பெண்களுக்கு “வீரமங்கை வேலுநாச்சியார்” பெயரில் விருதுகளை வழங்கி கௌரவித்தார் . இந்த விழாவில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தென் மாவட்டங்களில் அதிக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடக்கும் மாவட்டங்களில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.