கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விசிக மாவட்ட செயலாளர் மாதேஷ் புகார் மனு:
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிருஷ்ணகிரி மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த 28ஆம் தேதி சூளகிரியில் கட்சியின் முப்பெரும் விழா நடைபெற்றது. அந்த விழாவில், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று குறைகளை கேட்டதுண்டா? என சற்று ஆவேசமாக பேசினேன். அதிமுக தொண்டர்களின் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு செயலாளர் கோவேந்தன், முன்னாள் ஆசிரியர் கூட்டமைப்பின் செயலாளர் தமிழ்மணி, கிருஷ்ணகிரி பொறுப்பாளர் தியாகு, முன்னாள் மாவட்ட செயலாளர் கனியமுதன், ஆகியோர் வருத்தம் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்து இருந்தனர்.இது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து அல்ல என்று தெரிவித்திருந்தனர். அதை நான் முற்றிலும் மறுத்து, நாங்கள் சூளகிரியில் உரையாற்றிய பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்துதான் என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன். செய்தியாளர்களை சந்தித்தவர்களை தான் கட்சியிலிருந்து நீக்கியதாக என்னுடைய கையெழுத்தினை மார்பிங் செய்து, கட்சியின் லெட்டர் பேட்டில் வெளியிட்டுள்ளனர். இது முற்றிலும் அவதூறான, சட்டத்துக்கு புறம்பான செயலாகும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு வழங்கியுள்ளேன். மேலும் அதிமுகவினர் மீது எந்த வன்முகத்துடனும் நான் பேசவில்லை, இது முழுக்க, முழுக்க மக்களின் அடிப்படை பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்லும் போராட்டம் தான். இதற்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டு
மே தவிர, அதை விடுத்து என்னையும் எங்கள் கட்சியின் தலைவரையும் ஜாதி வன்மத்தோடு பேசக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். என்னுடைய லெட்டர் பேடை தவறுதலாக பயன்படுத்தி கட்சியின் நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கியதாக போலியான அறிக்கை தயாரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இது எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சி ஏற்படுத்துவதுடன் கட்சிக்கு அவ பெயரையும் ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற கட்சி நிர்வாகிகளுக்கு இடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியவர் நபரை கண்டறிந்து வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளேன் என கூறினார் உடன் ஒன்றியசெயலாளர் ஆலப்பட்டி ரமேஷ், தொகுதி துணை செயலாளர் கார்த்திக் முரளி ராமன் உள்பட இருந்தனர்