தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் அரசியின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வத்தல் மலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அமுதகம் உணவு வளாகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த உணவகத்தின் செயல்பாடுகள் மற்றும் தரம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார் . இதனைத் தொடர்ந்து என்.எஸ். ரெட்டியூர் மற்றும் நல்லசேனஅள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் நல்லசேன அள்ளி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரும் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட என். எஸ். ரெட்டியூர் ரேஷன் கடையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் கடையில் விநியோகிக்கப்பட்டு வரும் அத்தியாவ
சியப் பொருள்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பரிசோதித்து, அதன் தரம் குறித்து கேட்டறிந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தரமாகவும் தங்கு தடையின்றியும் வழங்கிட வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் வத்தல்மலை அடிவாரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 2,95 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்தப் பணிகள் தரமாக இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவித்தார். இந்த ஆய்வின்போது தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணி, சத்தியா, ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சீனிவாசன் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலக உடன் இருந்தனர்.