திருப்பத்தூர்:ஏப்:6, திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
திருப்பத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டையினை சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி வழங்கினார்.
இந்நிலையில், நல வாரியத்தில் இல்லாத தொழிலாளர்களை பதிவு செய்ய சட்டமன்ற உறுப்பினர் முயற்சியினை மேற்கொண்டார்.
திருப்பத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டை, நினைவு பரிசு வழங்கி சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில்: திருப்பத்தூரில் பல்வேறு தொழில் சார்ந்துள்ள தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
கட்டுமானம், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் செய்து வரும் நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நல வாரிய சலுகைகளை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக திருமண உதவி திட்டம், கல்வி உதவித் தொகை, இழப்பீடு தொகை, சாலை விபத்து, மகப்பேறு ஆகிய நலத்திட்டங்கள் உள்ளது என குறிப்பிட்டு பேசினார்.
பல ஆண்டுகளாக பதிவு செய்யாமல் இருந்த தொழிலாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை விரைவில் கிடைத்ததற்கு நன்றிகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர், முன்னாள் நகர மன்ற தலைவர் அரசு, மாவட்ட பிரதிநிதி ஆர்வில், எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் என பலரும் கலந்து கொண்டனர்.