தஞ்சாவூர். பிப். 15.
உலகின் .முக்கிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது உணவு பதப்படுத்துதலில் உலக அளவில் முத்திரை பதிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் கூறினார்
தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் (நிப்டம்) 3வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழா வில் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறை மந்திரி சிராக் பாஸ்வான் கலந்துகொண்டு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார்.
தேசியஉணவு தொழில்நுட்பம் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத் தலைவர் சோதி, இயக்குனர் பழனிமுத்து ஆகியோர் முதுகலை மற்றும் இளநிலை மாணவ மாணவியருக்கு பட்டங்களே வழங்கிப் பேசினார்
விழாவில் இளங்கலை மாணவர் கள் 60 பேருக்கும் முதுகலை மாணவர்கள் 28 பேருக்கும், முனைவர் பட்ட மாணவர்கள் 2 பேருக்கும் என மொத்தம் 90 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன
விழாவில் மத்திய மந்திரி சிராக் பாஸ்வான் பேசியதாவது
நெல் உற்பத்திக்கு பெயர் பெற்ற வளமான காவிரி டெல்டாவில் அமைந்துள்ள நிப்டம். இந்தியா வின் உணவு தொழில் மேம்பாட்டு க்கு ஆதரவாக உள்ளது. உணவு தொழில் நுட்பஆராய்ச்சி மூலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான உணவுகளை தயாரிப்பதிலும் தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. உலகின் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா விளங்கி வருகிறது
உணவு பதப்படுத்தும் தொழில் விவசாயத்தையும், தொழில் துறை யும் இணைத்து விவசாயிகளின் மேம்பாட்டிற்கும், நுகர்வோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற் கும் உதவுவதாக அமைய வேண்டும்
மத்திய அரசு 2025- 26 ஆண்டிற் கான பட்ஜெட்டில் மற்றொரு நிப்டம் நிறுவனம் உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது .அதிநவீன ஆராய்ச்சி மூலம் உணவு தொழில் துறை வளர்ச்சிக்கு நிறுவனங்க ளின் வலுவான கூட்டமைப்பு, எதிர்காலத்திற்கு தேவையான உணவு சுற்றுச்சூழல் அமைப்பதே மத்திய அரசின் நோக்கம் ஆகும் இவ்வாறு அவர் பேசினார்
நிப்டம் நிர்வாக குழு தலைவர் சோதி பேசுகையில் .
இந்தியாவில் தற்போது உட் கொள்ளும் உணவில் மொத்தம் மதிப்பு ஆண்டு ரூபாய் 60 லட்சம் கோடி .இந்த மதிப்பு 2033 -இல் ரூபாய் 100 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே உணவுத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அதிக வாய்ப்புக ள் ஆராய்ச்சியிலும் மேலாண்மை வளர்ச்சியில் இருக்கிறது என்றார் நிறைவில் பதிவாளர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் நன்றி கூறினார்
தொடர்ந்து மத்திய மந்திரி சிராஜ் பாஸ் வான் வளாகத்தில் உணவு படுத்தும் வணிகத் தொழில் வளர்ச்சி மையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வசதிகளையும் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இங்கு படிக்கும் மாணவர்களுடைய கண்டுபிடிப்புகள் மற்றும் சாதனை கள் தேசிய அளவில் நின்று விடா மல் உலக அளவில் முத்திரை பதிக்க வேண்டும். அதற்கு உங்களு டைய கண்டுபிடிப்புகள் ஒவ்வொரு வீட்டில் உள்ள உணவு மேஜை மீது இருக்குமாறு செய்யப்பட வேண்டு ம் .இதில் உங்களுடைய பாரம்பரிய சுவையை மேம்படுத்தி வெற்றி கான வேண்டும் .இதனை செயல் படுத்த சிறந்த உறுதி மற்றும் செயலாக்கம் செய்ய வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்புக்கு நானும் எனது கட்சியும் ஆதரவு தெரிவிப்போம் என்றார்