மது போதையில்
வாகனம் ஓட்டிய 2 பேருக்கு
ரூ.20 ஆயிரம் அபராதம்
நாகர்கோவில், மே 9:
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் நேற்று போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த வழியாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, டிரைவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. இதையடுத்து வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதே போன்று நேற்று முன்தினம் ஒழுகினசேரி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த வாலிபர் ஒருவரும் மதுபோதையில் இருந்தார். அவருக்கும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


