மதுரை மாநகரில் பெய்த கன மழையில் காவல் ஆணையர் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து செய்து கண்காணித்து வந்த நிலையில் திலகர் திடல் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட ரயில்வே கருடர் பாலம் கீழ் மழைநீர் அதிகமாக தேங்கி இருந்த நிலையில் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்வதை தடுக்கும் பொருட்டு நான்கு சக்கர வாகன ரோந்து காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் அதை சிறுதும் கவனிக்காமல் TN 48 AP 1213 என்ற காரை ஒட்டி வந்த மதுரை கோச்சடை பகுதியில் குடியிருக்கும் கோபி என்பவர் மற்றும் காரில் இருந்த ரமேஷ் ஆகியோர் கருடர் ரயில்வே இருப்பு பாலத்தை கடக்க முயன்ற மேற்படி கார் நீரில் மூழ்கத் தொடங்கியது
இந்நிலையில் இதை கவனித்த காவல் கட்டுப்பாட்டு அறை ரோந்து வாகனத்தின் ஓட்டுநர் காவலர் 4246 தங்கமுத்து என்பவர் சத்தம் போடவும் அருகே இருந்த பொது மக்கள் ஆகிய மணி நகரத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் சந்திரசேகர் ஆகிய மூவரும் சேர்ந்து விரைவாக பாலத்தின் அடியே பாதி அளவு நீரில் மூழ்கிய நிலையில் இருந்த காரின் கதவுகளை திறந்து அதிலிருந்த ரமேஷ் மற்றும் கோபி ஆகியோரை கயிறுகள் கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் மேற்படி அவர் ஓட்டி வந்த TN 48 AP 1213 காரை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தண்ணீரில் இருந்து மீட்டனர். சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு காருடன் மழை நீரில் மூழ்கி இருந்த ரமேஷ் மற்றும் கோபி ஆகியோரை உடனே மீட்பு செய்த காவலர் 4246 தங்கமுத்து மற்றும் கார்த்திக் சந்திரசேகர் ஆகியோர்களின் நற் செயலை பாராட்டி தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஐபிஎஸ் பரிசுகள் வழங்கி வெகுவாக பாராட்டினார்.