ஊட்டி.டிச. 10.
ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம் சங்க அலுவலகத்தில் தலைவர் .வாசுதேவன் தலைமையிலும் , பொருளாளர் மரியம்மா, துணை தலைவர் , செல்வராஜ் , ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க செயலாளர் முகமது சலீம் அமைப்பின் கடந்த மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கூறினார் பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வரும் டிசம்பர் 24 தேசிய நுகர்வோர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது என்றும் , கோத்தகிரி ஆடுபெட்டு பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி ரேசன் கடை அமைத்து தரவேண்டும் என்றும் , கோத்தகிரி பகுதியில் தொழிலாளர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் விதமாக சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்றும், கோத்தகிரி மாதா கோவில் சாலையில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள வெட்டப்பட்ட கற்பூர மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைப்பின் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் இணை செயலாளர் வினோபா பாப் கூடுதல் செயலாளர் .பீட்டர், ஆலோசகர் பிரவின், செயற்குழு உறுப்பினர்கள் ரோஸ்லின், திரைசா, லலிதாசிவன், யசோதாசெல்வி விபின் குமார், சுரேஸ்,லெனின் மார்க்ஸ் மற்றும் உறுப்பினர்கள் பிரேம், செபாஸ்டியன், ஏசுராணி, சங்கீதா உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில துணை தலைவர் .செல்வராஜ் நன்றி கூறினார்.