வேலூர் மே. 14
வேலூர் மாவட்டம் வேலூர் விருதம்பட்டு அம்பேத்கர் மணி மண்டபம் அருகில் இந்தியன் புத்திஸ்ட் கவுன்சில் ஐ.பி.சி. புத்த விகார் சார்பில் வைசாக் பவுர்ணமி நாளில் ஐபிசி புத்த விகார் முதலாம் ஆண்டு நினைவு விழா, புத்தர் பிறந்த நாள் விழா, பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மத்திய செயற்குழு உறுப்பினர் மாநிலத் தலைவர் பாண்டியன் , பந்தேஜி நாகராஜ் ஆகியோர் தலைமையிலும் நகர நாட்டாண்மை அரிகிருஷ்ணன் ,ஐபிசி கௌரவ தலைவர் ராவான் நடராஜன் ஐபிசி செயலாளர் அரிஸ் அற்புதராஜ் பாண்டியன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
நெறியாளர் முனிவேல் வரவேற்புரையாற்றினார் சமுதாய தலைவர்கள் பௌத்த உபாசகர்கள் நிறம் மாற நீலமலர்கள் விழாவில் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் முதியோர்களுக்கு சேலைகள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர் உடன் நிதிஷ்குமார அருன்லால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.