தருமபுரி மாவட்டத்தில் ரூ.61.74 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை – அரூர் (வழி) தானிப்பாடி சாலை வரை நான்கு வழி சாலையாக அகலப்படுத்துதல் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் ரூ.61.74 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி 96 சதவீதம் நிறைவடைந்துள்ளது .இதை யடுத்து சாலை பணியை ஆட்சியர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது தருமபுரி கோட்ட பொறியாளர் நாகராஜ் மற்றும் உதவி பொறியாளர் இனியவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் ரூ.61.74 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை – அரூர் (வழி) தானிப்பாடி சாலை



