கோத்தகிரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் வருடாந்திர உற்சவ திருவிழா மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு சமூகத்தினர் கொண்டாடி மகிழும் திருவிழாவில் 20 ஆம் நாள் விழாவாக கோத்தகிரி சுற்றுவட்டார குரும்ப கவுண்டர்கள் சமூகத்தினர் ஒருங்கிணைத்து பால்குடம் தீர்த்தகுட, முளைப்பாரி, ஊர்வலத்துடன் குரும்ப கிடா வாகனத்தில் சாமியை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆடிப்பாடி அபிஷேகம் செய்தனர். அபிஷேக ஆராதனையுடன் நடைபெற்ற பூஜையில் மதியம் மாபெரும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோத்தகிரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் வருடாந்திர உற்சவ திருவிழாவில் தீர்த்தகுட ஊர்வலம்.



