நாகர்கோவில் ஆக 29
குமரி மாவட்டம் வாறுதட்டு பள்ளி கொல்லங்கோடு குறுவட்ட அளவில் வாவறை புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 14-வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கோ-கோ விளையாட்டுப் போட்டியிலும், ,14-வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கோ-கோ விளையாட்டுப் போட்டியிலும்
முதல் பரிசை வென்று சாதனை படைத்தது.மேலும் 17-வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் வாறுதட்டு பள்ளி இரண்டாம் பரிசை வென்றது.
14-வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் மாணவர் மெர்சின் தலைமையில் ஆலன் டெபின், ஜெபின், விஜேஷ், லிஜின், மெர்வின், அபிஷேக், சஞ்சை, ஹமக் பிளஸ்ஸிங், அகிலேஷ், அஸ்வின், ஸ்வீட்டஸ்ட் எல்ராய் ஆகிய மாணவர்களைக் கொண்ட குழு முதல் பரிசு வென்று பள்ளிக்குப் பெருமை தேடித் தந்தது.
மாணவியருக்கான போட்டியில் மாணவி அபிஷிகா தலைமையிலான குழுவினர் ரேஷ்மா, அனுஷ்கா, ஆஸ்மி, அபிஷிகா, அன்சிகா, ரெபிஷா, அஜேஷியா, சிஸ்மா மேக்லின், பெர்சியா, காவ்யா, சிபிஷா ராஜ், ரீஜா ஆகியோரைக் கொண்ட குழுவினர் கோ – கோ போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.
17-வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் மாணவர் ரோஜித் தலைமையில் அக்ஷய் , சுதீஷ், அஜின், அசோக், சுஜித், வால்டர், ஆர்.வி.அஸ்வின், ரெபின், சக்திவேல், அஸ்வின், ரெஞ்சித் ஆகிய மாணவர்களைக் கொண்ட குழு இரண்டாம் இடம் பிடித்தது.
குறுவட்ட அளவிலான கோ – கோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் அருட் தந்தை ஜஸ்டின் சுதீஷ்,பள்ளியின் தல நிர்வாகி ஜோசப் சந்தோஷ், வாறுதட்டு புனித சவேரியார் ஆலய உதவிப் பங்குத் தந்தை லிண்டோ, தலைமையாசிரியர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் என்.எம்.பிரேம்ராஜ் , ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் பாராட்டினர்.



