தஞ்சாவூர் ஜூலை 2 1
தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ஊராட்சிகளில் மக்களு டன் முதல்வர் திட்ட முகாம் வருகிற 1ந் தேதி தொடங்குகிறது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவ ர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது :
தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக அனைத்து கிராமஊராட்சிகளிலும் மக்களுடன் முதல்வர் திட்டம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது .அடுத்த மாதம் ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடக்கும் முகாம்கள் விவரம் வருமாறு:
திருப்பனந்தாள் வட்டாரம் அணைக்கரை, உக்கரை, மேல காட்டூர், சிதம்பரநாதபுரம் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து அணைக்கரை செந்தில் ஆண்டவர் திருமண மண்டபத்திலும், திருவோணம் வட்டாரம் தெற்கு கோட்டை, கிளாமங்கலம், வடக்கு கோட்டை, சோழகன் குடிகாடு, நெம் மேலி திப்பியக்குடி, பொய்யுண்டார் குடிகாடு, திருநள்ளுர், சங்கர நாத குடிகாடு பின்னையூர் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து தெற்கு கோட்டை சமுதாய கூடத்தி லும், ஒரத்தநாடு வட்டாரம் பொய் யுண்டார் கோட்டை, வடக்கூர் வடக்கு, வடக்கூர் தெற்கு, நடுவூர் ஈச்சங்கோட்டை ஆகிய ஊராட்சிக ளை ஒருங்கிணைந்து பொய்யுண் டார்கோட்டை விநாயகர் திருமண மண்டபத்திலும், வருகிற 1ந் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது.
அடுத்த மாதம்2ந் தேதி திருநீலக் குடி கிராம இ சேவை மைய கட்டிடம், ஆத்தி கோட்டை கிராம இ சேவை மைய கட்டிடம், முத்திவீரன் கண்டிய ன்பட்டி சூசையப்பர் கோவில் அருகேயும் நடக்கிறது. 6 ம் தேதி அருந்தபுரம் காமாட்சி ஹால், மருங்கபள்ளம் இ சேவை மைய கட்டிடம், நடுக்காவேரி பி சி என் திருமண மண்டபத்தில் நடக்கிறது, 7ம் தேதி கும்பகோணம் வட்டாரம் சமத்துவபுரம் பெரியார் நினைவு அரங்கம், அத்திவெட்டி ஆனந்தவல் லி மாரியம்மன் கோயில் பகுதி, ராமநாதபுரம் இ சேவை கட்டிடத்தில் நடக்கிறது.
8ம் தேதி குறிச்சி எஸ் வி திருமண மண்டபம், அம்மையாண்டி ஊராட்சி மன்ற அலுவலகம் , தெக்கூர் புயல் பாதுகாப்பு மைய கட்டிடத்திலும் நடக்கிறது. 9ம் தேதி தேப்பெருமா நல்லூர் கிராம இ சேவை மைய கட்டிடம், அணைக்காடு கிராம இ சேவை மைய கட்டிடம், வேங்கட சமுத்திரம் அன்னை திருமண மண்டபத்தில் நடக்கிறது. 13ஆம் தேதி ஊரணிபுரம் சித்திரை விநாயகர் திருமண மண்டபம், புதுக்குடி கிராமம் இ சேவை மைய கட்டிடத்தில் நடக்கிறது.
அந்தந்த ஊராட்சி பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைக ளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். மக்களு டன் முதல்வர் முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப் பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்ப டையில் உரிய சேவைகள் 30 நாட்க ளில் மக்களுக்கு வழங்கப்படும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட் டுள்ளது.